பாளையங்கோட்டையில் 5 மி.மீ. மழை :

பாளையங்கோட்டையில் 5 மி.மீ. மழை :
Updated on
1 min read

பாளையங்கோட்டையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 5 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதுபோல் திருநெல்வேலியில் 0.4 மி.மீ, சேரன்மகாதேவியில் 1 மி.மீ. மழை பெய்திருந்தது.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 105.65 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 62 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 138.50 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 93.85 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 7 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 162 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 118.44 அடி, வடக்குபச்சையாறு நீர்மட்டம் 43.60 அடி, நம்பியாறு நீர்மட்டம் 12.79 அடி, கொடுமுடியாறு நீர்மட்டம் 7.25 அடியாக இருந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in