தி.மலை அருகே மூதாட்டியிடம் : 10 பவுன் நகை பறிப்பு :

தி.மலை அருகே மூதாட்டியிடம் : 10 பவுன் நகை பறிப்பு  :
Updated on
1 min read

திருவண்ணாமலை அருகே மூதாட்டியின் கழுத்தில் இருந்த 10 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கால் அசோக் நகரில் வசிப்பவர் ராஜா. இவரது மனைவிஎப்சிபாய்(70). இவர், சுகாதாரத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், காய்கறிகளை வாங்கிக் கொண்டு வேங்கிக்கால் மின் வாரிய பேருந்து நிறுத்தத்தில் இருந்து தனது வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார்.

அப்போது, தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், எப்சிபாய் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து தி.மலை கிழக்கு காவல் நிலையத்தில் எப்சிபாய் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் அப்பகுதியில் கண் காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, மின்வாரிய அலுவலகத்தில் இருந்து தலைக்கவசம் அணிந்து வந்த நபர் எப்சிபாய் கழுத்தில் இருந்த நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, செயினை பறித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in