காளையார்கோவில் அருகே கார் கவிழ்ந்து 3 பேர் உயிரிழப்பு :

காளையார்கோவில் அடுத்த உழவூரணியில் விபத்துக்குள்ளாகி சேதமடைந்த கார்.
காளையார்கோவில் அடுத்த உழவூரணியில் விபத்துக்குள்ளாகி சேதமடைந்த கார்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அடுத்த உழவூரணி வளைவில் சென்றபோது காரை திருப்ப முடியாமல் போனதால் நிலைதடுமாறி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில் அல்லிராணி (45), அவரது உறவினர் சாயல்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் (65) ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் காயமடைந்தனர். இதில் மதுரை முல்லை நகரைச் சேர்ந்த ராஜா (52) மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் இறந்தார். மற்றவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காளையார்கோவில் போலீஸார் விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in