கணவர் வேலைக்கு செல்லாததால் திருச்சுழி அருகே மனைவி தற்கொலை :

கணவர் வேலைக்கு செல்லாததால் திருச்சுழி அருகே மனைவி தற்கொலை :
Updated on
1 min read

திருச்சுழி அருகே உள்ள பனைக்குடியைச் சேர்ந்தவர் சரண்யா (22). கணவர் அழகு முத்து. இவர்களுக்கு 7 வயதில் மகள், 4 வயதில் மகன் உள்ளனர். அழகுமுத்து வேலைக்குச் செல்லாமல் இருந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த சரண்யா அருகே உள்ள தாயார் வீட்டில் வசித்துள்ளார். இந்நிலையில், திடீரென விஷம் அருந்தி சரண்யா மயங்கிக் கிடந் தார். அதை அறியாத அவரது 4 வயது மகனும் விஷம் குடித்தார்.

இதைப் பார்த்த சரண்யாவின் தாய் சங்குவள்ளி, இருவரையும் அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர், தாயும் மகனும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை பலனின்றி சரண்யா உயிரிழந்தார். அவரது மகன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து நரிக்குடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in