சாலையை சீரமைக்க வலியுறுத்தி - ஈரோடு மாநகராட்சி ஆணையரிடம் வணிகர்கள் மனு :

சாலையை சீரமைக்க வலியுறுத்தி  -  ஈரோடு மாநகராட்சி ஆணையரிடம் வணிகர்கள் மனு :
Updated on
1 min read

ஈரோட்டில் பாதாள சாக்கடைப் பணிக்காகத் தோண்டப்பட்ட சாலையைச் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தில் வணிகர்கள் மனு அளித்தனர்.

இதுதொடர்பாக வீரப்பன்சத்திரம் அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில், அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. பல்வேறு காரணங்களால், 14 ஆண்டுகள் ஆகியும் இன்னும் பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது. இதைப்போல் ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட வீரப்பன்சத்திரம் பாரதிதியேட்டர் சாலையில் குழாய் அமைப்பதற்காக, தோண்டப்பட்ட சாலை இன்னும் சீரமைக்கப்படவில்லை.

இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதாலும், சாலையில் எழும் புழுதியாலும், அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. ஏற்கெனவே கரோனாவால் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் வியாபாரிகள், தற்போது மேலும் பாதிப்படைந்து வருகின்றனர்.எனவே, உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி, இனிப்பு வழங்கி நூதன முறையில் போராட்டம் நடத்த முடிவு செய்திருந்தனர். இறுதியில் போராட்டத்தைக் கைவிட்டு மாநகராட்சி ஆணையரிடம் வணிகர்கள் மனு அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in