களக்காட்டில் வெடிகுண்டுகளுடன் கூலிப்படையினர் 5 பேர் சிக்கினர் :

களக்காட்டில்  வெடிகுண்டுகளுடன் கூலிப்படையினர் 5 பேர் சிக்கினர் :
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டில் நாட்டு வெடிகுண்டு களுடன் திரிந்த கூலிப்படையினர் 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

களக்காடு இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொத்தையடி அருகே போலீஸாரைக் கண்டதும் 5 பேர் தப்பியோடினர். அவர்களை போலீஸார் துரத்திப் பிடித்தனர். விசாரணையில், அவர்கள் நாங்குநேரி அருகேயுள்ள நடுத்தெருவைச் சேர்ந்த பாவநாசம் மகன் முத்துமனோ (27), பொத்தையடி தெற்கு தெருவை சேர்ந்த முருகேசன் மகன் மாதவன் (19), ஆறுமுகநயினார் மகன் சந்திரசேகர் என்ற சேகர் (22), பணகுடி துரை மகன் விக்னேஷ் (17), களக்காடு பெத்தானியா சர்ச் தெரு சாதுசுந்தர்சிங் மகன் அருள்துரைசிங் என்ற கண்ணன் (23) என்பதும், . இவர்கள் கூலிப்படையாகச் செயல்படுவதும் தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

களக்காடு காவல் நிலைய த்துக்கு அவர்ளை கொண்டு சென்று போலீஸார் விசாரித்தபோது, காதல் விவகாரத்தில் பணகுடியை சேர்ந்த ஒருவரை கொலை செய்வதற்காக பொத்தையடியில் பதுங்கியிருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in