Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM
ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
பக்தர்கள் காணிக்கை செலுத்த கோயில் வளாகத்தில் 16 நிரந்தர மற்றும் 9 தட்டு காணிக்கை உண்டியல்கள் வைக்கப்பட்டுள் ளன. பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் ஒவ்வொரு மாதமும் எண்ணப்படும். இந்த மாதத்துக்கான உண்டியல் எண்ணிக்கை, இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் விஜயலட்சுமி, மாசாணியம்மன் கோயில் உதவி ஆணையர் கருணாநிதி ஆகியோர் முன்னிலையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சலவநாயக்கன்பட்டியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.
நிரந்தர உண்டியலில் காணிக்கையாக 41 லட்சத்து 81 ஆயிரத்து 85 ரூபாயும், தட்டு காணிக்கை உண்டியலில் 6 லட்சத்து 19 ஆயிரத்து 336 ரூபாயும் இருந்தன.
அத்துடன் 238 கிராம் தங்கம், 322 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் ஆய்வாளர்கள் தமிழ்வாணன், அருண், லோகு ஆகியோர் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT