Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

வால்பாறை நகரில் சிறுத்தை நடமாட்டம் :

கோவை மாவட்டம் வால்பாறை நகரில் உள்ள வாழைத்தோட்டம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பலர் ஆடு, மாடுமற்றும் நாய்களை வளர்த்துவரு கின்றனர்.

வனப் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைகள் இரை தேடிஅடிக்கடி குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்து ஆடு, மாடுகளை வேட்டையாடி வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்புசோலையாறு எஸ்டேட் பகுதியில்சிறுவனை சிறுத்தை ஒன்று தாக்கியது. இந்நிலையில், வாழைத்தோட்டம் அருகில் உள்ள செவன்த் டே சர்ச் அருகில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஒரு சிறுத்தையை அப்பகுதி வழியாக வாகனத்தில் சென்றவர்கள் படம் பிடித்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையை வனத் துறையினர் கூண்டு வைத்து பிடித்து வனத்தில் விட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x