Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

பொன்முடி மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு :

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ம் ஆண்டு பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவ்வழக்கு நேற்று விசார ணைக்கு வந்தது.

அப்போது இருவரும் ஆஜராகவில்லை.

அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்தனர். இதையடுத்து இவ்வழக்கின் விசாரணையை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவழகன் உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x