Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உண்டியல் திறப்பு :

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் 11 உப கோயில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி மீனாட்சி அம்மன் கோயிலில் நேற்று நடைபெற்றது.

கோயில் இணை ஆணையர் க.செல்லத்துரை தலைமை வகித்தார். மடப்புரம் பத்திரகா ளியம்மன் கோயில் உதவி ஆணையர் ஜி.செல்வி முன்னி லை வகித்தார். இதில் ரூ.62 லட்சத்து 69 ஆயிரத்து 273 ரொக்கம், தங்க நகைகள் 590 கிராம், வெள்ளிப் பொருட்கள் 700 கிராம் மற்றும் 12 அயல்நாட்டு நோட்டுகள் கிடைத்தன.

தக்கார் பிரதிநிதி, கண்காணிப் பாளர்கள், மதுரை இந்து சமய அறநிலையத் துறை தெற்கு, வடக்கு சரக ஆய்வர்கள், கோயில் அலுவலர்கள், பணியாளர்கள், வங்கி ஊழியர்கள் காணிக்கை எண்ணும் பணியில் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x