Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

தேனி தும்பக்காடை புலிகள் சரணாலயமாக அறிவித்ததை ரத்து செய்யக்கோரி வழக்கு : ஆவணங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு

மதுரை

தேனி மாவட்டம், வருசநாடு அருகே தும்பக்காடு பகுதியை புலிகள் சரணாலயமாக அறிவி த்ததை ரத்து செய்யக்கோரிய வழக்கில் ஆவணங்களை தாக் கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனியைச் சேர்ந்த ஆண்டி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தேனி மாவட்டம், தும்பக்காடு பகுதியில் 15 கிராமங்கள் உள்ளன. இப்பகுதி புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பகுதியில் புலிகள், வன விலங்கு நடமாட்டம் எதுவும் இல்லை. தும்பக்காடு பகுதியில் வசிக்கும் மக்கள் 75 ஆண்டுகளுக்கு மேலாக இங்கு உள்ளனர். இங்கு விளைபொருட்களை மாட்டு வண்டிகள் மூலமே சந்தைக்கு கொண்டு செல்கின்றனர். விவசாய நிலங் களுக்கு செல்ல சரியான பாதை வசதியில்லை. எனவே, தும்பக்காட்டை சுற்றியுள்ள 15 கிராமங்களை புலிகள் சரணா லயமாக அறிவிக்கப்பட்ட அரசா ணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. மனுதாரரின் வழக்கறிஞர் வாதிடுகையில், சரணாலயமாக அறிவிப் பத ற்கு முன்பு அப்பகுதியில் வசிக் கும் மக்களுக்கு நோட்டீஸ் வழங்கப்படவில்லை, ஆய்வும் நடத்தப்படவில்லை என கூறினார்.

இதையடுத்து, வனவிலங்கு சர ணாலயம் அறிவிப்பு தொடர்பான வழக்குகளில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் உத்தரவு நகல் மற்றும் ஆவ ணங்களை தாக்கல் செய்ய உத் தரவிட்டு விசாரணையை ஏப். 17-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x