Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

கரோனா புதிய கட்டுப்பாடுகளால் நார்த்தாமலை கோயில் தேரோட்டம் ரத்து :

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் பூச்சொரிதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஏப்.12-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. அன்றைய தினம் உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப்.10-ம் தேதிக்குப் பிறகு மறு உத்தரவு வரும் வரை திருவிழா நடத்த அரசு தடை விதித்துள்ளது. இதையடுத்து, தேரோட்டத் திருவிழாவை ரத்து செய்வதுடன், அன்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்த உள்ளூர் விடுமுறையையும் ரத்து செய்வதாக ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி தெரிவித்தார். இதேபோல, பொன்னமராவதி அருகே ஆலவயலில் வேட்டைக்காரன் சுவாமி கோயில் திருவிழாவையொட்டி இன்று (ஏப்.9) நடைபெற இருந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை ரத்து செய்வதென ஊர்க்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x