Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

கீரைசாத்து நெல் கொள்முதல் நிலையத்தை - 60 நாட்களுக்கு திறக்க விவசாயிகள் கோரிக்கை :

வேலூர் மாவட்டத்தில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தை மேலும் 60 நாட்களுக்கு திறக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக விவ சாயிகள் சங்க வேலூர் கிழக்கு மாவட்டத் தலைவர் ராஜா நேற்று அளித்துள்ள மனுவில், ‘‘வேலூர் மாவட்டத்தில் கீரைசாத்து கிராமத்தில் தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. அதனை, மூடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து இயங்க வேண்டும்

இந்த நெல் கொள்முதல் நிலையத்தை மூடாமல் மேலும் 60 நாட்களுக்கு செயல்பட நீட்டிப்பு ஆணை வழங்க வேண்டும். தற்போது, விவசாயிகள் நெல் பயிரிட்டு அறுவடை செய்யும் நேரம் என்பதால் கொள்முதல் நிலையம் தொடர்ந்து இயங்குவதற்காக கால நீட்டிப்பு செய்ய வேண்டும்.

2-வது நெல் களஞ்சியம்

விவசாயிகளிடம் கூலியை மட்டுமே வசூல் செய்ய வேண்டும். தமிழகத்தின் 2-வது நெல் களஞ்சியம் என அழைக்கப்படும் வேலூர் மாவட்டத்தில் அரசு நிரந்தர கொள்முதல் நிலையங்கள் அமைத்து தரவேண்டும். ஆண்டு முழுவதும் நெல் கொள்முதல் செயல்பட்டால் விவசாயிக்கு நல்ல வருவாய் கிடைக்கும்.

இதன் மூலம் போலியான வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்வதை தடுக்க முடியும். குறிப்பாக, ரயில் நிலையங்களுக்கு அருகே நெல் கொள்முதல் நிலை யங்கள் அமைக்க வேண்டும்’’ என மனுவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x