சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் - கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிருப்பு போராட்டம் :

Published on

கிராம நிர்வாக அலுவலர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தி சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த தச்சாம்பாடி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்குச்சாவடி அலுவலராக பணியாற்றி வந்தவர் கிராம நிர்வாக அலுவலர் ராஜா ராம். இவர், கடந்த 6-ம் தேதி தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரை, அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் தகாத வார்த்தைகளால் பேசி தாக்கிய தாக கூறப்படுகிறது.

இது குறித்து சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் காவல்துறையிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக் காததை கண்டித்து, கிராம நிர்வாக அலுவலர் சங்க வட்டச் செயலாளர் ஜான்சன் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள், சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கிராம நிர்வாக அலுவலர் ராஜாராமை தாக்கியவர்கள் மீது கைது செய்ய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in