Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

தொழிலாளி தற்கொலை விவகாரம் - ஆம்பூர் அருகே உறவினர்கள் போராட்டம் :

ஆம்பூர் அருகே கட்டிடத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை தடுத்து நிறுத்திய உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி விஜய் (28). இவருக்கு திருமணமாகி குடும்பப் பிரச்சினை காரணமாக இவரது மனைவி பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டில் உறங்கச் சென்ற விஜய் காலையில் அறையை விட்டு வெளியே வரவில்லை. இதனால், சந்தேக மடைந்த அவரது உறவினர்கள் உள்ளே சென்று பார்த்தபோது. விஜய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.இது குறித்து தகவலறிந்த உமராபாத் காவல் துறையினர் அங்கு வந்து விஜய் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, பிரேதப் பரிசோதனைக்கு பிறகு உடல் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் வீட்டுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது காலதாமதாக தகவல் தெரிந்து அங்கு வந்த விஜய்யின் மனைவி மற்றும் அவரது உறவினர்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி. ஏன் தங்களுக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கேட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், விஜய்யின் பெற்றோர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.இதைதொடர்ந்து, அங்கு வந்த காவல் துறையினர் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். அதன் பிறகு, விஜய் உடல் பாட்டூர் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x