Published : 08 Apr 2021 03:12 AM
Last Updated : 08 Apr 2021 03:12 AM

வாக்கு எண்ணும் மையத்தில் கமல்ஹாசன் ஆய்வு :

கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை பார்வையிட்ட மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். படம்: ஜெ.மனோகரன்

கோவை

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோவை தெற்கு தொகுதி வேட்பாளரான கமல்ஹாசன், நேற்று முன்தினம் சென்னை சென்று வாக்களித்துவிட்டு உடனடியாக கோவை திரும்பினார்.

கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறுவாக்குச்சாவடிகளை பார்வை யிட்டார்.

இந்நிலையில், வாக்கு எண்ணும் மையமான தடாகம் சாலை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்துக்கு நேற்று காலை சென்ற அவர், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள காப்பு அறைகளுக்கு சென்று ஆய்வு செய்தார். வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் நடைமுறைகள் குறித்து அங்கிருந்த மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவரும் சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளருமான ஆர்.மகேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x