Published : 08 Apr 2021 03:13 AM
Last Updated : 08 Apr 2021 03:13 AM

ரயிலில் பயணி தவறவிட்ட - ரூ.10 லட்சம் தங்க நகையை மீட்ட ஆர்பிஎப் போலீஸார் :

கன்னியாகுமரி மாவட்டம், கணபதிபுரம், பூச்சிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மதிகிருஷ்ணன். இவர் நேற்று முன்தினம் இரவு நாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி விரைவு ரயிலில் நேற்று அதிகாலை 5.30 மணிளவில் சென்னை தாம்பரம் ரயில் நிலையம் வந்தடைந்தார். அப்போது தான் கொண்டு வந்த பையை ரயிலிலேயே தவறவிட்டு இறங்கிச் சென்றுள்ளார்.

அந்த பையில் சுமார் ரூ.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 240 கிராம் தங்க நகைகள் இருந்துள்ளன. சிறிது நேரத்துக்கு பிறகு நகை பை நினைவுக்கு வர, உடன் தாம்பரம் ரயில் நிலையத்துக்கு மீண்டும் வந்துள்ளார். அதற்குள் ரயில் தாம்பரத்தில் இருந்து எழும்பூர் நோக்கிச் சென்றுள்ளது. அதிர்ச்சி அடைந்த மதிகிருஷ்ணன் உடனடியாக இதுகுறித்து தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படை போலீஸார் எழும்பூர் ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். மதிகிருஷ்ணன் வந்த ரயில் காலை 5.50 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தவுடன் ரயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று நகை அடங்கிய பையை மீட்டு, தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து அவரை எழும்பூர் வரவழைத்து அவர் தவறவிட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகை அடங்கிய பையை ஒப்படைத்தனர். இதற்காக ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு நன்றி தெரிவித்துவிட்டு நகையை பெற்றுச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x