மீனவர் கிராமத்தில் மோதல் :

மீனவர் கிராமத்தில் மோதல்  :
Updated on
1 min read

மரக்காணம் அருகே கைப்பானி குப்பம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்த சத்யன் தரப்பிற்கும், மகேஷ் தரப்பிற்கும் முன் விரோதம் உள்ளது. தேர்தல் நாளான நேற்று, இருதரப்பினரும் அவர்களது கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்து விட்டு வீட்டில் இருந்துள்ளனர்.

அப்போது ‘இரு தரப்புக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, தடி, இரும்புபைப் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கண்மூடித்தனமாக மோதிக்கொண்டனர். இந்த மோதலில் இருதரப்பைச் சேர்ந்த 15 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காயம் அடைந்தவர்களை போலீஸார் மரக்காணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மரக்காணம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரனை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in