Published : 07 Apr 2021 03:17 AM
Last Updated : 07 Apr 2021 03:17 AM
மதுரை மாவட்டத்தில் துணை ராணுவப் படையினர் கண்காணித்த பதற்றமான வாக்குச்சாவடிகளை தேர்தல் பார் வையாளர்கள் ‘வெப் கேமராக்கள்’ மூலம் வாக்குப்பதிவைக் கண்காணித்தனர்.
மதுரை மாவட்டத்தில் 1,330 பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு அங்கு 428 துணை ராணுவப்படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் அனைத்தும், வெப் கேமராக்கள் பொருத் தப்பட்டு தேர்தல் பார்வையாளர்கள் இணையம் வழியாகக் கண்காணித்தனர்.
மேலும், அங்கு நுண் பார்வையாளர்கள் பணியமர்த்தப்பட்டிருந்தனர். இதனால் பதற்றமான வாக்குச்சாவடிகளில்கூட அமைதியாக வாக்குப்பதிவு நடந்தது. தனக்கன்குளத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மட்டும் திமுக, அதிமுக வினர் இடையே லேசான வாக்கு வாதம் ஏற்பட்டது. துணை ராணுவப்படையினர் எச்சரித்து அப்புறப்படுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT