Published : 07 Apr 2021 03:18 AM
Last Updated : 07 Apr 2021 03:18 AM

ஆலங்குளம் அருகே - மின்சாரம் பாய்ந்து அரசு ஊழியர் உயிரிழப்பு :

தென்காசி

தென்காசி மாவட்டம், வீரகேரளம் புதூர் அருகே உள்ள இடையர்தவணை கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிகரன் (49). இவர், ஆலங்குளத்தில் உள்ள வேளாண்மைத் துறை அலுவலகத்தில் தோட்டக்கலை உதவி அலுவலராக பணியாற்றி வந்தார். தேர்தல் பணிஒதுக்கப்பட்டதையடுத்து இவர், பணி ஆணையை பெற்றுக்கொண்டு கபாலிபாறை கிராமத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.

சிவலார்குளம் அருகே உள்ள தனது நண்பர் பாலசுப்பிரமணியன் என்பவரது தோட்டத்துக்கு குளிக்கச் சென்றுள்ளார். அப்போது, மோட்டார் அறை அருகில் இருந்த எர்த் கம்பியில் கையை வைத்துள்ளார். அதில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட ஹரிகரன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸார் அங்கு சென்று, சடலத்தை மீட்டனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x