Published : 07 Apr 2021 03:18 AM
Last Updated : 07 Apr 2021 03:18 AM

பழனிசாமி மீண்டும் முதல்வராக தமிழக மக்கள் விரும்புகின்றனர் : அமைச்சர் நிலோபர்கபீல் தகவல்

எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதல்வராக வர வேண்டும் என தமிழக மக்கள் விரும்புவதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் வாணி யம்பாடி சட்டப்பேரவை உறுப் பினரும், தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சருமான நிலோபர் கபீலுக்கு இந்த தேர்தலில் கட்சித்தலைமை மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. இதற்கு, அமைச்சர் கே.சி.வீரமணி தான் காரணம் என குற்றஞ்சாட்டி அமைச்சர் நிலோபர் கபீல் கடந்த மாதம் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு எதிராக பல் வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

வாணியம்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் செந்தில் குமாருக்கு ஆதரவாக ஒரு சில நாட்களே தேர்தல் பிரச்சாரம் செய்த அமைச்சர் நிலோபர்கபீல் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் முழுமையாக ஈடுபடவில்லை என அக்கட்சியினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.

இந்நிலையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோ பர்கபீல் வாணியம்பாடி நீலி கொல்லை மசூதி பகுதியில் உள்ள மதரசயே முபிதே ஆம் உருதுப்பள்ளியில் நேற்று தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது, அமைச்சர் நிலோபர்கபீல் செய்தியாளர் களிடம் கூறும்போது, ‘‘அதிமுக கூட்டணி கட்சியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. முதல்வர் பழனிசாமியே மீண்டும் முதல்வராக வர வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகின்றனர்.

வாணியம்பாடி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியான ஒன்று. தமிழகம் முழுவதும் அதிமுக கூட்டணி அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x