Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

கோவை மாநகரில் 2020-21-ம் நிதியாண்டில் - ரூ.173 கோடி சொத்து வரி வசூல் :

கோவை

கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப் பாட்டின் கீழ் உள்ள 100 வார்டுகளிலும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வரிவிதிப்பு இனங்கள்உள்ளன. இதில் சொத்து வரி மற்றும் குடிநீர்கட்டணம் பிரதான வரி வருவாயாக உள்ளது.இதில் 2020-21-ம் நிதியாண்டில் சொத்து வரி ரூ.171.26 கோடியும், நிலுவை கணக்கில் ரூ.45.67 கோடியும் வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. வரிகளை வசூலிக்க பணிகள் துரிதமாக நடைபெற்றன. இதையடுத்து, மொத்தம் ரூ.173 கோடி வரிவசூலாகியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி வருவாய் பிரிவு அதிகாரிகள் கூறும்போது, “சொத்து வரியாகரூ.155.60 கோடி வசூலாகியுள்ளது. ரூ.15.66 கோடி வசூலிக்க வேண்டியுள்ளது. நிலுவை வரி ரூ.45.67 கோடியில் ரூ.17.40 கோடி வசூலாகியுள்ளது. இன்னும் ரூ.28.27 கோடி வசூலிக்க வேண்டியுள்ளது. வாக்குப்பதிவுக்கு பிறகு, பாக்கி வரியை 3 மாதங்களுக்குள் வசூலிப்போம்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x