Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM

உசிலம்பட்டியில் ரூ. 2 லட்சம் பறிமுதல் :

உசிலம்பட்டி, எழுமலை பகுதி யில் அதிமுக, அமமுக சார்பில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதாக பறக்கும் படையினருக்கு புகார் வந்தது.

இதையடுத்து எழுமலை, கோடாங்கி நாயக்கன்பட்டியில் பறக்கும் படை அதிகாரி சரஸ் வதி தலைமையிலான குழு வினர் சோதனை நடத்தினர்.

அப்பகுதியைச் சேர்ந்த அம முகவினர் 4 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்களிடம் இருந்து ரூ.94,110 பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து எழுமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

உசிலம்பட்டி பூதிப்புரம், பண்ணைப்பட்டி பகுதியில் அதிமுக வேட்பாளருக்கு ஆத ரவாக பணப் பட்டுவாடா செய் ததாக 3 பேரை பிடித்து ரூ.1,08,600 பறிமுதல் செய்தனர். இதுகுறித்து உசிலை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x