

கலசப்பாக்கம் அருகே மின்னல் தாக்கி சிறுமி உயிரிழந்தார்.
தி.மலை மாவட்டம் கலசப் பாக்கம் அடுத்த சிறுவள்ளூர் கிராமத்தில் வசித்தவர் ஏழுமலைமகள் மீரா(16). இவர், மழையில் நனைந்த ஆடுகளை மரத்தடியில் கட்ட சென்றுள்ளார். அப்போது, மழை பெய்து கொண்டிருந்ததால், மின்னல் தாக்கி மீரா உயிரிழந்துள்ளார். இது குறித்த கடலாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.