Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு :

கடலூரில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதி களில் 3,001 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிவதற்காக 14,404 பணியாளர்கள், 206 நுண் பார்வையாளர்கள், 1,253 காவல்துறையினக்கு கணிணி மூலம் பணி ஒதுக்கீடு நேற்று முன்தினம் இரவு தொடங்கி வைக்கப்பட்டது.

பணி ஒதுக்கீடு செய்வதை மாவட்ட தேர்தல் அலுவலர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் பொதுபார்வையாளர்கள் சஞ்சீவ்கௌஷிக், டாக்டர் ஜி.சி.பிரகாஷ், டாக்டர் ஓம் பிரகாஷ்,பவானி சிங் கங்கரட், ராஜேஷ்குமார் ஒக்ரே, காவல் பார்வையாளர் பன்வர்லால் மீனா ஆகியோர் பார்வை யிட்டனர்.

எஸ்பி அபிநவ், மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, மாவட்ட தகவல் அலுவலர் அருள்மொழி, தேர்தல் வட்டாட்சியர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x