Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

பறக்கும் படை சோதனையில் பணம் பறிமுதல் ஐஜேகே சேலம் மாவட்ட செயலாளர் கைது :

சேலம்: ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க முயன்ற ஐஜேகே மாவட்டச் செயலாளரை போலீஸார் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டப்பேரவைத் தொகுதியில் இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) சார்பில் போட்டியிடும் பெரிய சாமிக்கு ஆதரவாக, சேலம் ஐஜேகே கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வகுமார் உள்ளிட்ட அக்கட்சியினர் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஆத்தூர் அடுத்த அம்மம்பாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந் தனர். அப்போது, அவ் வழியாக வந்த ஐஜேகே மாவட்டச் செயலாளர் செல்வ குமாரின் காரில் சோதனை செய்தனர்.

இதில், காரில் உரிய ஆவணங்கள் இன்றி இருந்த ரூ.3.90 லட்சத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில், அந்த பணம் வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து, தேர்தல் அதிகாரிகள் புகாரின்பேரில், ஆத்தூர் டவுன் போலீஸார், செல்வகுமாரை நேற்று கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x