Published : 05 Apr 2021 03:15 AM
Last Updated : 05 Apr 2021 03:15 AM

நாமக்கல்லில் நாள்தோறும் - 1,200 பேருக்கு கரோனா பரிசோதனை :

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தொற்று பரிசோதனை எண்ணிக்கைககள் அதிகப்படுத்தப் பட்டுள்ளது, என நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அலுவலர்கள் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த வாரம் நாள்தோறும் 900 நபர்கள் சோதனை செய்தோம். தற்போது 1,200 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப் படுகிறது. மேலும், மாவட்டம் முழுவதும் 72 அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாள்தோறும் 2,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப் படுகிறது. இந்தப் பணியில் 500 ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் தற்போது 13 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x