திண்டிவனம் அருகே - வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா? :

திண்டிவனம் அருகே  -  வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா? :
Updated on
1 min read

திண்டிவனம் அருகே கடவம்பாக்கம் கிராமத் தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் கண்காணிப்புக்குழு அலுவலர் சக்திவேலுவுக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. உடனடியாக அக்கிராமத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, அருள்ஞான தேசன் என்பவர் வீட்டிற்கு வெளியே இருக்கும் செடியில் ஒரு சாக்கு பை கிடந்தது. அதை திறந்து பார்த்தபோது அதில் ரூ. 75 ஆயிரம் பணம் இருப்பது தெரியவந்தது. உடனே அதனை பறிமுதல் செய்து, திண்டிவனம் தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் உஷாவிடம் ஒப்படைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in