மாவட்ட மைய நூலகச் சுவர்களில் - வாக்காளர் விழிப்புணர்வு ஓவியங்கள் :

மாவட்ட மைய நூலகச் சுவர்களில் -  வாக்காளர் விழிப்புணர்வு ஓவியங்கள் :
Updated on
1 min read

பாளையங்கோட்டையில் உள்ள மாவட்டமைய நூலகச் சுவர்களில் வாக்காளர் விழிப்புணர்வு ஓவியங் களை சிவராம் கலைக்கூடத்தைச் சேர்ந்த 25 மாணவிகள் வரைந்தனர்.

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம், மைய நூலக வாசகர் வட்டம், கோபாலசமுத்திரம் கிராம உதயம், சிவராம் கலைக்கூடம் ஆகியவை இணைந்து 100 சதவீத வாக்களிப்பு மற்றும் வாக்காளர் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. ஓவியங்களை வரைந்த மாணவிகள் பாராட்டப் பட்டனர். இந்நிகழ்ச்சிக்கு சிவராம் கலைக்கூட இயக்குநர் ஓவியர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட நூலக அலுவலர் எல். மீனாட்சி சுந்தரம், துணை வட்டாட்சியர் பழனி, வாசகர் வட்ட துணைத் தலைவர் கோ. கணபதி சுப்பிரமணியன், நூலகர் முத்துகிருஷ்ணன், நூலக கண்காணிப்பாளர் சங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in