தேர்தலை முன்னிட்டு விழுப்புரத்தில் இருசக்கர வாகன ரோந்து தொடக்கம் :

தேர்தலை  முன்னிட்டு விழுப்புரத்தில் இருசக்கர வாகன ரோந்து தொடக்கம் :
Updated on
1 min read

விழுப்புரத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பதற்றமான வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதிகள், சோதனைச்சாவடி மையங்கள், வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் வழங்குவதை தடுக்கவும், தேர்தல் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள காவல்துறையின் இருசக்கர ரோந்து வாகனங்கள் இயங்கும். தேர்தல் பாதுகாப்பு பணிக்காக இருசக்கர வாகன ரோந்து சேவையினை விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர் அண்ணாதுரை நேற்று தொடங்கி வைத்தார். எஸ்பி ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா.பி.சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in