நெல்லையில் 51 பேருக்கு கரோனா :

நெல்லையில் 51 பேருக்கு கரோனா :
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 51 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப் பட்டது. கரோனா காரணமாக வட்டார போக்குவரத்து அலுவல கம் 4 நாட்களுக்கு மூடப்பட்டது.

மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்துவந்த நிலையில், தற்போது நாளுக் குநாள் பாதிக்கப்பட்டோர் எண் ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 31 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. நேற்று 51 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அதில் திருநெல்வேலி மாநகர பகுதியில் மட்டும் 36 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனியிலுள்ள வட்டார போக்கு வரத்து அலுவலகத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த அலுவலகத்தை வரும் 3-ம் தேதி வரை மூடுவதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in