100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி - குடங்கள் மீது அமர்ந்து : 5 வயது சிறுவன் யோகாசனம் :

சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி குடங்கள் மீது அமர்ந்து யோகாசனம் செய்த சிறுவன் தர்ஷன்.
சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி குடங்கள் மீது அமர்ந்து யோகாசனம் செய்த சிறுவன் தர்ஷன்.
Updated on
1 min read

தி.மலை மாவட்டம் நேரு யுவகேந்திரா மற்றும் தீபமலை ஆன்மிக தொண்டு இயக்கம் சார்பில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி 5 வயது சிறுவனின் யோகாசன நிகழ்ச்சி தி.மலையில் நேற்று நடைபெற்றது.

நேரு யுவகேந்திரா மாவட்டஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். தொழிலதிபர் தங்கவேல், வழக்கறிஞர் ஷோபனா ராணி, முதுகலை அறிவியல் ஆசிரியர் முருகன் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். தொண்டு நிறுவன இயக்குநர் ராஜா ஹரிகோவிந்தன் அனைவரையும் வரவேற்றார்.

உதவி இயக்குநர் யமுனா ஹரிகோவிந்தன் தொடங்கி வைத்தார். 5 வயது சிறுவன் எச்.தர்ஷன், சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் குடங்கள் மீது அமர்ந்து பத்மாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சிறுவனை வாழ்த்தி நீதிபதி கிருபாநிதி பரிசுவழங்கினார்.

இதில், அரசு மருத்துவர் பாலமுரளி, எழுத்தாளர் வாசுதேவன், யோகா பயிற்சியாளர் கல்பனா, அறிவியல் ஆசிரியர் ஹயத்பாஷா, மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். அனிஷ்குமார் நன்றி கூறினார்.

இந்த சிறுவன் தக்காளிகள் மேல் அமர்ந்து பத்மாசனம் உள்ளிட்ட 21 ஆசனங்கள் செய்து உலக சாதனை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in