Published : 29 Mar 2021 03:16 AM
Last Updated : 29 Mar 2021 03:16 AM

குண்டர் சட்டத்தில் 2 இளைஞர்கள் கைது :

புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி அருகே அரசர்குளம் மாணிக்கம் குடியிருப்பைச் சேர்ந்தவர் முருகையா மகன் அஜித்(20). இவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாக அறந்தாங்கி அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் அண் மையில் கைது செய்திருந்தனர்.

இந்நிலையில், மாவட்ட எஸ்.பி எல்.பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் அஜித்தை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி நேற்று உத்தர விட்டார்.

இதேபோல, ராணிப்பேட்டை மாவட்டம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ரவி மகன் விஜய் (22). இவரை திருட்டு வழக்கு ஒன்றில், பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் போலீஸார் அண் மையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த விஜயை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க பெரம்பலூர் எஸ்.பி நிஷாபார்த்திபன் பரிந்துரையின்பேரில் ஆட்சியர்  வெங்கடபிரியா உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x