Published : 28 Mar 2021 03:17 AM
Last Updated : 28 Mar 2021 03:17 AM

நெல் கொள்முதல் மையங்களை திறக்க கோரி - மார்ச் 31-ல் காத்திருக்கும் போராட்டம் : விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் மையங்களை திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச் 31-ம் தேதி காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும்என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் கடந்த ஆண்டை விட குறைவு என்றும், அறுவடை அதிகம் நடைபெறும் பகுதியில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.நேரு தலைமையில் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில் நேரடி நெல் கொள்முதல் மையங்களை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்ச் 31-ம் தேதி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x