4 நாட்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு :

4 நாட்களுக்கு மதுக்கடைகளை  மூட உத்தரவு :
Updated on
1 min read

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் 4 நாட்கள் மதுபானக் கூடங்கள் மூடப்படுகின்றன, என நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் ஏப்.,4 முதல் 6-ம் தேதி மற்றும் மே 2 ஆகிய நான்கு தினங்களுக்கு இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் அயல்நாடு மதுபான உரிம வளாகங்கள் ஆகியவற்றை மூட வேண்டும். குறிப்பிட்ட நாளில் மதுபான நிலையங்கள் மற்றும் கூடங்களை திறந்தோ அல்லது மறைமுகமாக விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in