முதியோர் உதவித்தொகை வழங்க  -  ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது :

முதியோர் உதவித்தொகை வழங்க - ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது :

Published on

முதியோர் உதவித்தொகை வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அலுவலரை நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைது செய்தனர்.

திருச்செங்கோடு அருகே மானத்தியைச் சேர்ந்தவர் சுகுமாரன் (72). இவர் முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரி மானத்தி கிராம நிர்வாக அலுவலர் வசந்தியிடம் (40) விண்ணப்பம் செய்திருந்தார். எனினும், ரூ.4 ஆயிரம் லஞ்சம் தந்தால் முதியோர் உதவித்தொகை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கை எடுப்பதாக கிராம நிர்வாக அலுவலர் வசந்தி கூறியுள்ளார்.

இத்தொகையை வழங்க மனமில்லாத சுகுமாரன், இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் செய்தாார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரின் ஆலோசனையின்படி நேற்று முன்தினம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த வசந்தியிடம் வழங்கியுள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் வசந்தியை சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in