நெல்லையில் 18 பேருக்கு கரோனா :

நெல்லையில்  18 பேருக்கு கரோனா :
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் 18 பேருக்கு கரோனா பாதிப்பு நேற்று கண்டறியப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 15,964 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 15,634 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 13 பேர் குணமடைந்தனர். இந்நிலையில் 18 பேர் புதிதாக கரோனாவால் நேற்று பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மாவட்டத்தில் 215 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் நேற்று 6 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதுவரை மொத்தம் 8,438 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 67 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in