Published : 26 Mar 2021 03:16 AM
Last Updated : 26 Mar 2021 03:16 AM

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8,795 தபால் வாக்குகள் :

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, ரிஷிவந் தியம், உளுந்தூர்பேட்டை, சங்கராபுரம் ஆகிய 4தொகுதிகளில் 8,795 தபால் வாக்குகள் உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயது நிரம்பியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கும் வசதியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தபால் மூலம் வாக்களிக்க விரும்புவோருக்கான விண் ணப்பப் படிவம் 12 பி வழங் கப்பட்டது. இதில் 2,028 பேர் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு இம்மாதம் 30 மற்றும் 31-ம் தேதி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேபோன்று தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் சுமார் 6,767 பேருக்கு விண்ணப்பப் படிவம் வழங்கப்பட உள்ளதாகவும், இவர்கள் வாக்களிக்கும் வாக்காளர் சீட்டு அச்சடிக்கும் பணி முடிந்தவுடன் வாக்குப்பதிவு தேதி அறிவிக்கப்படும் என்றும் கள்ளக்குறிச்சி தேர்தல் ஆணைய அலுவலர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x