திருச்செங்கோடு வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு :

திருச்செங்கோடு வாக்கு எண்ணும் மையத்தில் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கா.மெகராஜ் ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி.
திருச்செங்கோடு வாக்கு எண்ணும் மையத்தில் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் கா.மெகராஜ் ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி.
Updated on
1 min read

திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் சட்டப் பேரவை தேர்தலையொட்டி வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பல்வேறு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனை நாமக்கல் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கா.மெகராஜ் ஆய்வு செய்தார்.

ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம்(தனி), நாமக்கல், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்கள், ஒவ்வொரு தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பதற்கான உறுதியான அறை, வாக்கு எண்ணும் அறை, தபால் வாக்குகள் எண்ணும் அறை உள்ளிட்டவற்றை ஆட்சியர் மெகராஜ் ஆய்வு செய்தார்.

அப்போது பணிகளை விரைந்து முடிக்கும்படி அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி மற்றும் தேர்தல் அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in