Published : 26 Mar 2021 03:17 AM
Last Updated : 26 Mar 2021 03:17 AM

செட்டிக்குளம் முருகன் கோயில் தேரோட்டத்துக்கு அனுமதி :

பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளம் தண்டாயுதபாணி சுவாமி கோயில் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டத்தை மார்ச் 28-ம் தேதி நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் செட்டிக்குளத்தில் அமைந்துள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம் விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கரோனா பரவல் அச்சம் காரணமாக பங்குனி உத்திர தேரோட்டம், சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகளுக்கு பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேரோட்டத்தை நடத்த அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியும் இந்து முன்னணி அமைப்பினரும், பக்தர்களும் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று மார்ச் 28-ம் தேதி பங்குனி உத்திர தேரோட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x