தி.மலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை :

தி.மலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை :
Updated on
1 min read

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு 13-வது மாதங்களாக நீடிக்கிறது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் 24-ம் தேதி மாலையில் இருந்து, தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால், திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையை கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்தாண்டு பங்குனி மாதத்தில் இருந்து கிரிவலம் செல்ல விதிக்கப்பட்ட தடை உத்தரவு தொடர்ந்து நீடிக்கிறது.

இதுகுறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருவண் ணாமலையில் 14 கி.மீ., தொலைவுள்ள அண்ணா மலையை, தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரி வலம் செல்கின்றனர். கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23-ம் தேதி ஊரடங்கு பிறப்பிக் கப்பட்டது. பின்னர், பல தளர்வுகளுடன் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக் கப்பட்டுள்ளது. இருப்பினும், தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது.

இதனால், திருவண்ணா மலையில் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு அனுமதி வழங் கினால், வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து அதிகளவில் வரும் பக்தர்களால் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

எனவே, மக்களின் நலன் கருதி, பவுர்ணமி நாளான வரும் 28-ம் தேதி அதிகாலை 3.13 மணிக்கு தொடங்கி 29-ம் தேதி அதிகாலை 1.18 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்ல வேண்டாம். கரோனா பரவாமல் தடுக்க, மக்களின் பாதுகாப்புக்கு எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ் மாத கணக்குப்படி, தொடர்ந்து 13-வது மாதங் களாக கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in