சிறுமி பலாத்காரம் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை :

சிறுமி பலாத்காரம்  இளைஞருக்கு 20 ஆண்டு சிறை :
Updated on
1 min read

ஈரோட்டில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஈரோடு வீரப்பன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (32). கோபி அருகே உள்ள தனது பாட்டி வீட்டுக்குச் சென்ற இவர், 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், கோபி மகளிர் காவல்துறையால் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு மகளிர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மாலதி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரண தொகையாக ரூ.5 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜரானார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in