நெய்வேலி அருகே - முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் :

குறிஞ்சிப்பாடி வட்டார சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் வடக்குத்து பகுதியில் வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
குறிஞ்சிப்பாடி வட்டார சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் வடக்குத்து பகுதியில் வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
Updated on
1 min read

நெய்வேலி அருகே முகக் கவசம் அணியாதவர்களுக்கு சுகாதாரத் துறையினர் அபராதம் விதித்தனர்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழுர், வடக்குத்து, இந்திரா நகர் பகுதிகளில் வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வை யாளர் சக்கரை கண்காணிப்பில் சுகாதார ஆய்வாளர்கள் மாரிமுத்து, கனகரத்தினம், ஜெயச்சந்திரன், மணிகண்டபிரபு ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். முகக்கவசம் அணியாவிட்டால் நோய் தொற்று எவ்வளவு வேகமாக அதிகரிக்கும் என்பது குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறினர். கூட்டம் அதிகமுள்ள வணிக நிறுவனங்களிலும், வங்கி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. முகக்கவசம் இன்றி வெளியே நடமாடக் கூடாது என்ற உறுதி மொழியையும் எடுக்கச் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in