Published : 25 Mar 2021 03:15 AM
Last Updated : 25 Mar 2021 03:15 AM

கரோனா வழிகாட்டுதல்களை பிரச்சாரத்தில் பின்பற்றுவது அவசியம் :

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பொது பார்வையாளர்கள் சந்திரசேகர் வாலிம்பே, பிரசன்னா வி.பட்டனசெட்டி, அனுராதா சங்கர் ஆகியோர் தலைமையில், மாவட்ட ஆட்சியர் கிரண்குராலா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக் ஆகியோர் முன்னிலையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய தேர்தல் பார்வையாளர்கள்,“தேர்தல் தொடர்பான எந்தவொரு புகார்களும் எந்நேரத்திலும் எங்களுடைய தொலைபேசி வாயிலாக அல்லது நேரடியாகவோ தெரிவிக்கலாம். கரோனா வழிகாட்டுதல்களை பின்பற்றி சமூக இடைவெளிகளுடன் பிரச்சார பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

எந்தவொரு அரசியல் கட்சியினரும் பணம், பரிசு பொருட்கள் மற்றும் இதர சலுகைகள் வாக்காளர்களுக்கு வழங்க கூடாது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x