தேர்தல் பணியில் ஈடுபடும் - அலுவலர்களுக்கு 27-ம் தேதி இரண்டாம் கட்டமாகப் பயிற்சி :

தேர்தல் பணியில் ஈடுபடும் -  அலுவலர்களுக்கு 27-ம் தேதி இரண்டாம் கட்டமாகப் பயிற்சி  :
Updated on
1 min read

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்டமாகப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது, என நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான கா.மெகராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்தி குறிப்பு:

நாமக்கல் மாவட் டத்தில் 2021 சட்டப் பேரவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியாளர்களுக்கான இரண் டாம் கட்ட பயிற்சி வகுப்பு வரும் 27-ம் தேதி அனைத்து சட்டப்பேரவை தொகுதி களிலும் அமைந்துள்ள பயிற்சி மையங்களில் நடைபெறவுள்ளது.

பயிற்சியின்போது தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் அனைவரும் தங்களது தபால் வாக்குகளை பயிற்சி மையத்திலேயே பதிவு செய்ய ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தபால் வாக்குச்சீட்டில் மேலொப்பம் செய்யவும் அலுவலர்கள் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைத்து தேர்தல் பணியாளர்களும் தங்களது தபால் வாக்கை தவறாது பதிவு செய்ய வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in