பெரம்பலூர் நகராட்சி 5-வது வார்டு மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு :

பெரம்பலூர் நகராட்சி 5-வது வார்டு  மக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு :
Updated on
1 min read

பெரம்பலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட பெரம்பலூர் நகராட்சியின் 5-வது வார்டு பழைய உரிமையியல் நீதிமன்ற தெரு மக்கள் அடிப்படை வசதி களை செய்து தராததைக் கண் டித்து, சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறி வித்துள்ளனர்.

தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி எம்எல்ஏ உள்ளிட்ட பலரிடம் முறை யிட்டும் இப்பகுதியில் சாலை வசதி செய்து தராததைக் கண்டித்தும், 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யும் போக்கை சரிசெய்ய வலியுறுத்தியும் நடை பெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவ தாக அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்த அப்பகுதி மக்கள் தங்கள் கோரிக்கை மனுவை பெட் டியில் போட்டுவிட்டுச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in