நிறுத்திவைக்கப்பட்ட திமுக வேட்பாளரின் மனு ஏற்பு :

நிறுத்திவைக்கப்பட்ட  திமுக வேட்பாளரின் மனு ஏற்பு :
Updated on
1 min read

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டப்பேரவைத் (தனி) தொகுதியில் போட்டியிட அதிமுக, திமுக, அமமுக மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 23 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலின் கடைசி நாளில் மட்டும் 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று ராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அப்போது திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் எம்.மதிவேந்தனுக்கு நாமக்கல், ராசிபுரம் ஆகிய இரு இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதாகவும், எனவே அவரது மனுவை நிராகரிக்க வேண்டும் எனவும் சுயேச்சை வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளித்தனர். இதையடுத்து திமுக வேட்பாளர் மதிவேந்தன் மனு நிறுத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து வேட்பாளர் மதிவேந்தன் தரப்பில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் கடந்த டிசம்பர் மாதம் நாமக்கல்லில் உள்ள வாக்கை நீக்க மனு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான சான்றும் மனுவுடன் இணைக்கப்பட்டதாக குறிப்பிடப் பட்டது. இதனை ஆய்வு செய்த தேர்தல் அதிகாரிகள் திமுக வேட்பாளர் மனுவை ஏற்றனர். இச்சம்பவத்தால் ராசிபுரம் திமுகவினர் மத்தியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in