Published : 21 Mar 2021 03:16 AM
Last Updated : 21 Mar 2021 03:16 AM

இந்து முன்னணி தொடர் உண்ணாவிரதம் :

செட்டிகுளம் தண்டாயுத பாணி சுவாமி கோயில் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டத்தை ரத்து செய்த மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து இந்து முன்னணி அமைப்பினர் நேற்று தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கினர்.

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் தண்டாயு தபாணி சுவாமி கோயில் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு கரோனா தொற்று பரவல் அச்சம் காரணமாக மாவட்ட நிர்வாகம் தேரோட்ட நிகழ்ச்சியை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேரோட்டத்தை நடத்த அனுமதிக்க வலியுறுத்தியும் செட்டிகுளம் மாரியம்மன் கோயில் முன்பு இந்து முன்னணி அமைப்பினர் நேற்று முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத் தில் ஈடுபட்டுள்ளனர்.

அவ்வமைப்பின் திருச்சி கோட்ட செயலாளர் குண சேகரன் தலைமையில், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் செல்வ குமார், மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள் கஜேந்திரன், நிர்வாகி கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x