Published : 20 Mar 2021 03:15 AM
Last Updated : 20 Mar 2021 03:15 AM

கரூர் மாவட்டத்தில் நாளை கனிமொழி பிரச்சாரம் :

கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் திமுக வேட்பாளர் களை ஆதரித்து நாளை (மார்ச் 21) எம்.பி கனிமொழி பிரச்சாரம் செய்கிறார்.

கரூர் கலைஞர் அறிவாலயத்தில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளரான எம்எல்ஏ வி.செந்தில்பாலாஜி 100-க்கு 100 என்ற தலைப்பில் கரூர் சட்டப்பேரவைத் தொகுதி வளர்ச்சிக்காக 100 வாக்குறுதிகள் என்ற கையேட்டை வெளியிட்டார்.

அப்போது அவர் செய்தியாளர் களிடம் கூறியது: கரூர் தொகுதி வளர்ச்சிக்காகவும், மக்களுக் காகவும் 100 வாக்குறுதிகள் வெளியிடப் படுகின்றன.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் அடுத்த 5 ஆண்டுகளில் 100 வாக்குறுதிகளும் நிறைவேற்றப் படும். அடுத்த 5 ஆண்டுகளில் 100 வாக்குறுதிகளையும் நிறைவேற்றி மக்களிடம் 100 மதிப்பெண் பெறு வேன்.

9 இடங்களில் பிரச்சாரம்

திமுக மகளிர் அணிச் செய லாளர் எம்.பி கனிமொழி கரூர் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நாளை (மார்ச் 21) காலை 9 மணிக்கு வெள்ளியணை, 10 மணிக்கு தரகம்பட்டி, 11 மணிக்கு கொசூர், மதியம் 12 மணிக்கு தோகைமலை, மாலை 4 மணிக்கு அரவக்குறிச்சி, 5 மணிக்கு புன்னம்சத்திரம், 6 மணிக்கு கரூர் பேருந்து நிலைய ரவுண்டானா, இரவு 7 மணிக்கு தாந்தோணிமலை, 8 மணிக்கு நெரூர் என 9 இடங்களில் பிரச்சாரம் செய்கிறார் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x