100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி  உறுதிமொழி ஏற்பு   :

100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு :

Published on

100 சதவீத வாக்குப்பதிவை வலி யுறுத்தும் விதமாக பெரம்பலூர் மாவட்டம் பாலக்கரை பகுதியில் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள், மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ப. வெங்கட பிரியா தலைமையில் நேற்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும், 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகை களை ஏந்தி விழிப்புணர்வை ஏற்படுத் தினர். மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் காமாட்சி, தேர்தல் விழிப்புணர்வு விளம்பர பிரிவு வட்டாட்சியர் நூர்ஜஹான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in